ADDED : நவ 08, 2024 11:49 PM

அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, யூனியன் வங்கி கிளை சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிக்கலாம்பளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
வங்கி, ஊரக வளர்ச்சி அலுவலர் திவ்யா தலைமை வகித்தார். 'ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில், பல்வேறு தலைப்பில் மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
வங்கி துணை மேலாளாளர் அனுபாரதி பங்கேற்று, மாணவ, மாணவியர் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவது குறித்து பேசினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
