sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 20 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்பு

/

 20 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்பு

 20 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்பு

 20 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்பு


ADDED : டிச 13, 2025 05:09 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்: கண்ணம்பாளையம் நாகையன் தோட்ட சாலை பகுதியில், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட, 20 சென்ட் நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.

சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் நாகையன் தோட்ட சாலை பகுதியில் பாலு கார்டன், லட்சுமி நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ரோட்டை ஒட்டி இருந்த நீர் வழிப்பாதை மற்றும் ரோட்டின் ஒரு பகுதி, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால், ரோட்டில் மழை நீர் தேங்கி நடக்க கூடாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

வருவாய்த்துறையிடம் ஆக்கிரமிப்பை அகற்றித்தர, பல முறை கோரிக்கை விடுத்திருந்தனர். எந்த நடவடிக்கையும் இல்லாததால், சில நாட்களுக்கு முன், கருப்பு கொடி கட்டி, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சூலூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் அங்கு சென்ற வருவாய்த்துறையினர், ஆக்கிரமிக்கப்பட்ட, 20 சென்ட் இடத்தை மீட்டனர். அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us