sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சரவணம்பட்டி சாலையில் 100 கி.மீ., வேகம்! 'பறக்கும்' வாகனங்களுக்கு 'பழுக்கிறது' அபராதம்

/

சரவணம்பட்டி சாலையில் 100 கி.மீ., வேகம்! 'பறக்கும்' வாகனங்களுக்கு 'பழுக்கிறது' அபராதம்

சரவணம்பட்டி சாலையில் 100 கி.மீ., வேகம்! 'பறக்கும்' வாகனங்களுக்கு 'பழுக்கிறது' அபராதம்

சரவணம்பட்டி சாலையில் 100 கி.மீ., வேகம்! 'பறக்கும்' வாகனங்களுக்கு 'பழுக்கிறது' அபராதம்


ADDED : பிப் 14, 2024 01:41 AM

Google News

ADDED : பிப் 14, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாநகரில் சரவணம்பட்டி பகுதியில், 100 கி.மீ., வேகத்திற்கு மேல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இவ்வாறு, அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிந்து, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

கோவை மாநகரில், 40 கி.மீ., வேகத்தில்தான் வாகனங்கள் இயக்க வேண்டும் என்று, 2019ம் ஆண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. காந்திபுரம், அவினாசி ரோடு மேம்பாலம், வைசியாள் வீதி, செல்வபுரம் ஆகிய பகுதிகளில், 30 கி.மீ., வேகத்தில் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் அவசர கால வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் இந்த வேக கட்டுப்பாட்டை மீறி, கோவை மாநகரில் பல இடங்களில் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன.

அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க, கோவை அவினாசி ரோட்டில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் அருகேயும், கோவை- சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அம்மன் கோவில் அருகிலும், கோவை - பாலக்காடு சாலையிலும் என, 3 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் ஒரே நேரத்தில், 32 வாகனங்களின் வேகத்தை கண்காணித்து, பதிவு செய்யும் வசதி கொண்டவை. இந்த நவீன கேமராக்கள் மூலம் பறக்கும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகரில் நிர்ணயம் செய்யப்பட்ட, 40 கி.மீ., வேகத்தை விட, 15 சதவீத வாகனங்கள், 50 கி.மீ., முதல், 80 கி.மீ., வரை அதிவேகமாக செல்வது தெரியவந்துள்ளது.

கோவை- சத்தி ரோடு சரவணம்பட்டி பகுதியில், தினமும் ஏராளமான வாகனங்கள், 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கு, அபராத தொகை பல மடங்கு அதிகமாக விதிக்கப்படும்.

ஆயிரம் ரூபாய் அபராதம்!

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஜன., 25ம் தேதி கோவை- சத்தி ரோட்டில் உள்ள சரவணம்பட்டி பகுதியில், 24 மணி நேரத்தில் இரு மார்க்கமாக, 70 ஆயிரம் வாகனங்கள் பயணித்து உள்ளன.இதில், 3,534 நான்கு சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு, 50 கி.மீ., முதல் 80 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளன. 127 கார்கள், அதிகபட்சமாக மணிக்கு, 80 கி.மீ., முதல், 100 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளன.அதே நாளில், 4,354 பைக்குகள் மணிக்கு, 50 கி.மீ., முதல், 80 கி.மீ., வேகத்திலும், 190 பைக்குகள் மணிக்கு, 80 கி.மீ., முதல், 100 கி.மீ., வேகத்திலும், 138 பைக்குகள், 100 கி.மீ., வேகத்தை தாண்டியும் சென்றுள்ளன.ஆனால் அதே நேரத்தில் அவினாசி ரோட்டிலும், பாலக்காடு ரோட்டிலும் மிக குறைந்த எண்ணிக்கையிலான பைக்குகளும், கார்களும், 80 கி.மீ., வேகத்திற்கும் மேல் இயக்கப்பட்டு உள்ளன.தற்போது அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கு, அபராத தொகை பல மடங்கு அதிகமாக விதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us