/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுக்குழியில் மூழ்கி இருவர் பலி போலீசார் விசாரணை
/
கல்லுக்குழியில் மூழ்கி இருவர் பலி போலீசார் விசாரணை
கல்லுக்குழியில் மூழ்கி இருவர் பலி போலீசார் விசாரணை
கல்லுக்குழியில் மூழ்கி இருவர் பலி போலீசார் விசாரணை
ADDED : ஆக 27, 2024 01:39 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சிங்கையன்புதுாரில் உள்ள கல்லுக்குழியில் மூழ்கி இருவர் பலியாயினர்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ளது. இதில், பெரும்பாலான குவாரிகள் உரிமம் முடிந்து விட்டதால் அப்படியே விடப்பட்டுள்ளது.
இந்த குவாரிகளில் மழை காலத்தில் நீர் நிரம்பி காணப்படுவதால், மக்கள் பலர் ஆபத்தை உணராமல், இந்த குவாரியில் தேங்கிய நீரை துணிகள் துவைப்பதற்கும் மற்றும் குளிக்க பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் கிணத்துக்கடவு சிங்கையன்புதூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 28, கூலித்தொழிலாளி. இவர் தனது ஆடைகளை சலவை செய்ய, ரவி என்பவருக்கு சொந்தமான செயல்பாட்டில் இல்லாத, கல்லுக்குழிக்கு செல்லும் போது, அதே பகுதியைச்சேர்ந்த விஷ்ணு, 7 என்ற சிறுவனை உடன் அழைத்துச்சென்றார்.
அப்போது அங்கிருந்த கல்லின் மீது சிறுவனை அமர வைத்து விட்டு, விக்னேஸ்வரன் தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்தார். இதை கவனித்த சிறுவன், தண்ணீரில் குளிக்க எண்ணி கீழே இறங்கும் போது மூழ்கியுள்ளார். இதை கவனித்த விக்னேஸ்வரன் சிறுவனை காப்பாற்ற முற்படும் போது, இருவரும் இறந்தனர்.
கல்லுக்குழி வழியாக சென்ற அப்பகுதி மக்கள், இதை கவனித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

