/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் விலை உயர்வு விற்பனை விறுவிறுப்பு
/
வாழைத்தார் விலை உயர்வு விற்பனை விறுவிறுப்பு
ADDED : மார் 28, 2024 04:33 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வாழைத்தார் ஏலம் நடக்கிறது. கோபி, உடுமலை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற வெளி மாவட்டங்கள்; ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை, நஞ்சேகவுண்டன்புதுார், சிங்காநல்லுார், தொப்பம்பட்டி போன்ற பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.
ஏலத்தில், வியாபாரிகள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். விசேஷ நாட்களில், பழங்களின் தேவை அதிகம் உள்ளதால், விலை உயர்ந்து காணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது. ஒரு கிலோ பூவம்பழம் - 32 ரூபாய், கற்பூர வள்ளி - 30, செவ்வாழை - 47, மோரிஸ் - 27, நேந்திரம் - 32 மற்றும் கதளி - 26, ரஸ்தாலி - 35 ரூபாய்க்கும் ஏலம் போனது.
வியாபாரிகள் கூறுகையில், 'வெயிலின் தாக்கத்தால், வரத்து குறைந்துள்ளது; நேற்று, 1,500 வாழைத்தார் வரத்து மட்டும் இருந்தது. தேவை அதிகமாக உள்ளதால் விற்பனை, விறுவிறுப்பாக இருப்பதுடன், விலையும் உயர்ந்து காணப்பட்டது,' என்றனர்.

