sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்

/

ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்

ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்

ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்


ADDED : மே 17, 2024 10:40 PM

Google News

ADDED : மே 17, 2024 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில், ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணய உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜ வாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சி அளித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான தென்திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவாரி ஆலயம் உள்ளது.

இங்கு ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணய உற்சவத்தை முன்னிட்டு நேற்று முதல் வரும் 19ம் தேதி வரை ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று அதிகாலை சுப்ரபாதம், அதை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜ வாகனத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம்,ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணய உற்சவம் உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்திருமலை திருப்பதி ஸ்ரீ வாரி ஆனந்த நிலையம் அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.-






      Dinamalar
      Follow us