sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரண்டு வழிப்பறி வழக்குகளில் ரவுடிக்கு தலா 7 ஆண்டு சிறை

/

இரண்டு வழிப்பறி வழக்குகளில் ரவுடிக்கு தலா 7 ஆண்டு சிறை

இரண்டு வழிப்பறி வழக்குகளில் ரவுடிக்கு தலா 7 ஆண்டு சிறை

இரண்டு வழிப்பறி வழக்குகளில் ரவுடிக்கு தலா 7 ஆண்டு சிறை


ADDED : மார் 26, 2024 11:49 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;இரண்டு வழிப்பறி வழக்குகளில், ரவுடிக்கு தலா ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, ரத்னபுரி, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் இளமுருகன் என்ற கபாலி,43. இவர் மீது வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காந்திபுரம், டவுன் பஸ் ஸ்டாண்டில், ஆவின் டீக்கடை நடத்தி வந்த சத்யராஜ் என்பரிடம், 2021, ஆக., 4ல் கத்தியை காட்டி மிரட்டி, 1,500 ரூபாய் பறித்தார். அதே நாளில், காந்திபுரத்தில் தள்ளுவண்டியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்து வந்த, சுரேஷ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்தார்.

இருவர் கொடுத்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் விசாரித்து, இளமுருகனை கைது செய்தனர். கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதின்றத்தில், தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

விசாரித்த நீதிபதி கவுதமன், இளமுருகனுக்கு ஒவ்வொரு வழக்கிலும், தலா ஏழாண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் சிறப்பு வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.






      Dinamalar
      Follow us