/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவிலுக்கு இழப்பு ஏற்படுத்திய அறங்காவலர்கள் நீக்கம்
/
கோவிலுக்கு இழப்பு ஏற்படுத்திய அறங்காவலர்கள் நீக்கம்
கோவிலுக்கு இழப்பு ஏற்படுத்திய அறங்காவலர்கள் நீக்கம்
கோவிலுக்கு இழப்பு ஏற்படுத்திய அறங்காவலர்கள் நீக்கம்
ADDED : ஜூலை 12, 2024 11:06 PM
கோவை:கோவிலுக்கு இழப்பு ஏற்படுத்தியால், மூன்று அறங்காவலர்களை நீக்கி, கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூரில் நீலகண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அறங்காவலர்களாக, மனோகரன், இளமுருகன், தர்மலிங்கம் ஆகியோரை 2023ல், திருப்பூர் மண்டல, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், நியமித்தார்.
முன்னதாக, கோவில் வளாகத்தில் இருந்த 65 ஆண்டுகளுக்கும் பழமையான வேம்பு, அரசு மற்றும் ஆலமரங்களை வெட்டி விற்பனை செய்ததாக இம்மூவர் மீதும் புகார் எழுந்தது. மேலும், கோவிலுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்தை, கைவிட்டுப் போகும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
குற்றச்சாட்டுக்கு ஆளான மூவரையும் அறங்காவலர்களாக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை நீக்க வலியுறுத்தியும் முன்னாள் அறங்காவலர் நாராயணசாமி தரப்பில், சென்னை ஐ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேல் முறையீட்டில், இணை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
மனுவை விசாரித்த கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் பிறப்பித்த உத்தரவில் 'கோவிலுக்கு எதிராக செயல்பட்டு, கோவிலுக்கு இழப்பு ஏற்படுத்தியதால், அறங்காவலர்களை பதவியிலிருந்து விலக்கி வைத்து உத்தரவிடப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருமுருகன்பூண்டி செயல் அலுவலர் விமலா, நீலகண்டியம்மன் கோவில் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

