/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கராத்தே; கோவை வீரர்கள் தேர்வு
/
தேசிய கராத்தே; கோவை வீரர்கள் தேர்வு
ADDED : மே 08, 2024 12:25 AM

கோவை:உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க கோவையை சேர்ந்த 14 வீரர் - வீராங்கனையினர் தேர்வாகினர்.
தேசிய அளவிலான கராத்தே போட்டி உத்தரகாண்டில் நேற்று துவங்கி வரும் 11ம் தேதி வரை நடக்கிறது.
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையினர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த மாதம் தமிழகத்தில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோயம்புத்துார் ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி அசோசியேஷன் சார்பில் 90 வீரர் - வீராங்கனையினர் பங்கேற்றனர். அதில் 14 பேர் தங்கம் வென்றனர்.
மாநில போட்டியில் தங்கம் வென்ற 14 வீரர் - வீராங்கனையினர் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கோயம்புத்துார் ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி அசோசியேஷனின் பொதுக்குழு கூட்டத்தில் தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் - வீராங்கனையினர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கோயம்புத்துார் ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் தலைவர் கார்த்திகேயன், பொது செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

