sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண்ணிடம் ரூ.74 லட்சம் மோசடி ஒருவர் கைது; மூவருக்கு வலை

/

பெண்ணிடம் ரூ.74 லட்சம் மோசடி ஒருவர் கைது; மூவருக்கு வலை

பெண்ணிடம் ரூ.74 லட்சம் மோசடி ஒருவர் கைது; மூவருக்கு வலை

பெண்ணிடம் ரூ.74 லட்சம் மோசடி ஒருவர் கைது; மூவருக்கு வலை


ADDED : மே 22, 2024 05:33 AM

Google News

ADDED : மே 22, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : பெண்ணிடம், ரூ.74 லட்சம் மோசடி செய்த ஒருவரை, கைது செய்த போலீசார் மூவரை தேடி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த யோகேஷ் சந்தானம் மனைவி பிரதீபா, 42; சுயதொழில் செய்து வருகிறார்.

இவரது நண்பர் வாயிலாக சென்னையை சேர்ந்த தயாசேகர், ரவிச்சந்திரா, சரவணன், சந்திரமோகன் ஆகியோர் அறிமுகம் ஆகினர். கடந்தாண்டு ஜூன் மாதம், சந்திரமோகன் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். சிங்கப்பூர் அரசு உதவியுடன் புவி வெப்ப நிலையை குறைக்க, பணிகள் செய்வதாகவும் கூறினார்.

இதையடுத்து, கடந்தாண்டு ஆக., 5ம் தேதி சந்திரமோகன் நிறுவனத்தில், ரூ.74.10 லட்சத்தை பிரதீபா முதலீடு செய்தார். துபாயில் நடந்த தொழில் மாநாட்டில், புதிய திட்டத்திற்கான பணிகள் துவக்கப்படும் என, சந்திரமோகன் தெரிவித்தார். பிரதீபா அங்கு சென்ற போது, எந்த நிறுவனமும் துவங்கப்படவில்லை.

சந்திரமோகனிடம் கேட்ட போது பதில் அளிக்கவில்லை. முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்ட போதும் தரவில்லை. பிரதீபா, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், கோவையை சேர்ந்த சரவணன், 37 என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us