/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பீர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பு
/
கம்பீர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பு
ADDED : ஏப் 22, 2024 01:26 AM

போத்தனூர்;குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1-ல், கம்பீர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது.
கும்பாபிஷேகம் முன்னிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாஸனம், பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை நடந்தன. மாலை முளைப்பாரி எடுத்தல், கும்ப அலங்காரம், ரக் ஷா பந்தனத்துடன் முதற்கால பூஜை துவங்கியது.
நேற்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜையுடன் இரண்டாம் கால பூஜை நடந்தன. 7:00 மணிக்கு மூல விக்ரகங்களுக்கு காப்பு கட்டுதல் தொடர்ந்து மூலவருக்கு நாடி சந்தானம், மகாபூர்ணாஹுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடந்தன.
9:45 மணிக்கு மேல், விமான கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவ மூர்த்தி, பரிகார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகத்தை, திருவாரூர் வாமதேவ சிவம் சிவஸ்ரீ ஜெகதீசன் சிவாச்சாரியார் நடத்தி வைத்தார்.
இதையடுத்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தசதானம், தசமங்கள தரிசனம், கோ பூஜை நடந்தன. திரளானோர் பங்கேற்று, விநாயகரை வணங்கி சென்றனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.

