sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'காட்சியா' நிர்வாகிகள் பதவியேற்பு விழா

/

'காட்சியா' நிர்வாகிகள் பதவியேற்பு விழா

'காட்சியா' நிர்வாகிகள் பதவியேற்பு விழா

'காட்சியா' நிர்வாகிகள் பதவியேற்பு விழா


ADDED : மே 21, 2024 12:54 AM

Google News

ADDED : மே 21, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் (காட்சியா) 2024-25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடந்தது.

சங்கத்தின் புதிய தலைவராக விஜயகுமார், துணைத் தலைவராக செவ்வேல், செயலாளராக ராஜரத்தினம் மற்றும் பொருளாளராக மணிகண்டன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் மற்றும் பொறியாளர் வெங்கடசுப்ரமணி ஆகியோர், பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

புதிய தலைவர் விஜயகுமார் பேசியதாவது:

கட்டுமான மூல பொருட்களின் விலை, நாளுக்கு நாள் உயர்வதை தடுத்து, ஒரு நிலையான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். இதற்காக, சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகளுக்கான உரிமங்கள் வழங்குவதில் மிகவும் காலதாமதம் ஏற்படுவதால், மாநகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் ஆய்வு செய்து, உரிமங்களை வழங்க வேண்டும்''

இவ்வாறு, அவர் பேசினார்.

சங்கத்தின் முன்னாள் தலைவர் ரமேஷ்குமார் மற்றும் துணை செயலாளர் பிரேம்குமார் பாபு, துணை பொருளாளர் ரவி, மக்கள் தொடர்பு அலுவலர் திருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us