/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் பிரசாரம்
/
கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் பிரசாரம்
கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் பிரசாரம்
கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் பிரசாரம்
ADDED : மார் 26, 2024 11:53 PM
கோவை;கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, காங்கிரஸ் சார்பில், இன்று பிரசாரம் துவங்குகிறது.
இது குறித்து, கோவை மாநகர் மாவட்ட காங்., தலைவர் வக்கீல் கருப்புசாமி கூறியதாவது:
நாளை(இன்று) காலை 8:30 மணிக்கு, மருதமலை முருகன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, மருதமலை அடிவாரத்தில் இருந்து துவங்கி கல்வீரம்பாளையம், வடவள்ளி பேருந்து நிலையம் பகுதிகளில், பிரசாரம் துவங்குகிறது.
மதியம் 12:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்று, வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து தினமும், தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, காங்கிரஸ் தொண்டர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

