sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாழ்வியல் தத்துவம் விளக்கும் தேர்.. ஊர்கூடி தேர் இழுப்போம்

/

வாழ்வியல் தத்துவம் விளக்கும் தேர்.. ஊர்கூடி தேர் இழுப்போம்

வாழ்வியல் தத்துவம் விளக்கும் தேர்.. ஊர்கூடி தேர் இழுப்போம்

வாழ்வியல் தத்துவம் விளக்கும் தேர்.. ஊர்கூடி தேர் இழுப்போம்


ADDED : ஏப் 24, 2024 10:44 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை விளக்கும் அம்சமாக தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கடந்தாண்டு முதல், புதிய எண்கோண வடிவத்தில், உயரம், அகலம் என பிரமாண்டமான தேரில், சுவாமிகள் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.

பழைய தேரை விட சிறப்பு அம்சங்களுடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும், ஐந்து நிலைகளை கொண்டதாகவும், தேரின் மொத்த உயரம், 12 அடியாகவும், இதில் தேர்ப்பலகை, 9 அடி உயரத்திலும், சுவாமிகள் எழுந்தருளும் உற்சவருக்கான சிம்மாசனம், இரண்டடி உயரத்திலும், இலுப்ப மரம் மற்றும் தேக்கு மரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் எழுந்தருளியுள்ள கோவில்கள் மற்றும் அம்மன் அவதார சிற்பங்கள், வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகன் சிற்பங்கள் என, 220 மரச்சிற்பங்களும், மனித வாழ்வியல் தத்துவம் விளக்கும் வகையில், 120 போதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.

சிம்ம கொடியுடன் கலசம்


புதிய தேர் எண்கோண வடிவில் அதற்குரிய வடிவத்தில், புதிய கம்பிகள் இணைக்கப்பட்டு, பீடத்திற்கு மேல், 5 அடுக்கு மற்றும் புதிய கலசம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், செம்பு தகட்டினால் அற்புத வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட, செம்பு தகட்டினால் ஆன, சிம்மக்கொடி அமைக்கப்பட்டுள்ளது.

பழைய தேரை விட, புதிய தேர் உயரமாகவும், அகலமாகவும், புதிய வடிவில் பிரமாண்டமாக காணப்படுகிறது. ஏறத்தாழ, 50 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ''கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பது போல், தேர் கோபுர வடிவத்தில், கலசம் கொண்டதாகும். பக்தர்களுக்கு அருள் பாலிக்க திருத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கும் அற்புத நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது.

தேரின் அமைப்பு அண்டத்தையும், மனித சரீரத்தையும் குறிப்பிடுவதாகும். முதல் அடுக்கு, குண்டலனிஸ்தானம், நாபி, இருதயம், கழுத்து, மஸ்தக அந்தஸ்தானம், மத்திய ஸ்தானம், மஸ்தக ஆதி ஸ்தானம், துவாதசாந்தம் என எட்டு அண்டத்தை அடுக்குகளாக கொண்டு, உச்சியிலிருக்கும் கும்பம், சோடசாந்தம், நடுவில் இருக்கும் துாண்கள் தத்துவங்கள், இரு குதிரைகள், சூரியன், சந்திரன், பத்து சக்கரங்கள் தச வாயுக்கள் என தத்துவத்தை விளக்கும் அம்சமாக குறிப்பிடப்படுகிறது.

அதாவது பிண்டத்துவ சரீரமாகிய தேரில், தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, மனத்தை அசைவற்று, ஒரு நிலைப்படுத்தி, குண்டலினியிலிருந்து நாபிக்கும், கண்டத்திற்கும், நாசிக்கும், கண் வழியே புருவ மத்திக்கும் ஏற்றி, லயப்பட்டு, நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தை விளக்குவதே தேரின் அமைப்பாகும் என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us