sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

களப்பணி செய்ய தன்னார்வலர்கள் அழைப்பு

/

களப்பணி செய்ய தன்னார்வலர்கள் அழைப்பு

களப்பணி செய்ய தன்னார்வலர்கள் அழைப்பு

களப்பணி செய்ய தன்னார்வலர்கள் அழைப்பு


ADDED : ஆக 10, 2024 02:34 AM

Google News

ADDED : ஆக 10, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்;குளத்தில் களப்பணி செய்ய, தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில், கவுசிகா நீர் கரங்கள் சார்பில், குளங்களில், அடர்வனம் அமைத்தல், ஏரியை பலப்படுத்துதல், மழை நீர் வரும் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், மதகு பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வாரமும், ஞாயிறன்று, காலை களப்பணி நடைபெறுகிறது. 125 ஏக்கர் பரப்பளவு உள்ள கோவில்பாளையம், காளிங்கராயன் குளத்தில், 238வது வாரமாக, நாளை காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை களப்பணி நடக்கிறது. ஏ.எஸ்.குளம் ஊராட்சியில், 160 ஏக்கர் பரப்பளவு உள்ள அக்ரஹார சாமக்குளத்தில் 209வது வாரமாக நாளை களப்பணிநடக்கிறது.

இத்துடன் கொண்டையம் பாளையம் ஊராட்சியில் உள்ள வையம்பாளையம் தடுப்பணை, கரியாம்பாளையம் ஊராட்சியில் உள்ள 80 ஏக்கர் பரப்பளவு உள்ள எல்லப்பாளையம் ஆவாரம் குளம், அன்னூர் பேரூராட்சியில் உள்ள அல்லிகுளம் ஆகியவற்றில் நாளை காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை, மரக்கன்றுகள் நடுதல், களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.

'ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம்', என தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us