ADDED : ஆக 31, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நேற்று பொறுப்பேற்றார்.
அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில்,இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த, நித்யா, நீலகிரி மாவட்டம், ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஒரு மாதமாக சிறுமுகை மற்றும் காரமடை இன்ஸ்பெக்டர்கள் கூடுதல் பொறுப்பாக அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், தாளவாடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் செல்வம், நேற்று அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் பொறுப்பேற்றார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

