sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரண்டு முறை ஓட்டு போட முயன்ற தொழிலாளி கைது

/

இரண்டு முறை ஓட்டு போட முயன்ற தொழிலாளி கைது

இரண்டு முறை ஓட்டு போட முயன்ற தொழிலாளி கைது

இரண்டு முறை ஓட்டு போட முயன்ற தொழிலாளி கைது


ADDED : ஏப் 21, 2024 01:24 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில் வரிசையில் நின்றிருந்த ஒரு நபரின் கையில் மை வைக்க அலுவலர் அவரது விரலை காண்பிக்குமாறு கூறினார்.

அப்போது அவர் கையை பார்த்தபோது ஏற்கனவே ஓட்டு அளித்ததற்கான அடையாள மை வைக்கப்பட்டிருந்தது. ஓட்டுச்சாவடி அலுவலர் லதா மகேஸ்வரி உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.

விசாரணையில் அவர் நல்லாம்பாளையத்தை சேர்ந்த லேத் தொழிலாளி திருநாவுக்கரசு 52, என்பதும், அவருக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் என இரு இடங்களில் ஓட்டு இருந்ததும் தெரிந்தது.

அவர் காந்திபுரத்தில் ஓட்டளித்து விட்டு மீண்டும் இரண்டாவது ஓட்டு போட நல்லாம்பாளையம் வந்ததும் தெரிய வந்தது. கவுண்டம்பாளையம் போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us