sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நித்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

நித்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நித்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நித்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : ஏப் 22, 2024 01:06 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்;நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

நெகமம், நேரிளமங்கை உடனமர் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா, கடந்த 14ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், தீபாராதனை நிகழ்ச்சியுடன் துவங்கியது.

கடந்த 15ம் தேதி, திருமுறை பாராயணம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, தீபாராதனை நடந்தது.

16ம் தேதி, நவக்கிரக ஹோமம், சுவாமி எந்திரத்துக்கு மூல மந்திர ஹோமம், தீபாராதனை, உத்தமபத வாஸ்து சாந்தி, தீபஸ்தாபனம் நிகழ்ச்சிகள் நடந்தது.

17ம் தேதி, திருமுறை பாராயணம், சம்ஹிதா ஹோமம், கோபுர கலசம் வைக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது.

கடந்த 18ம் தேதி, மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கு கலாகர்ஷணம், முதல் கால யாக பூஜை நடந்தது. 19ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.

நேற்றுமுன்தினம் (20ம் தேதி), நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடந்தது.

21 தேதி, ஆறாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு, விமானங்கள் மற்றும் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு 'ஓம் நமசிவாயா' கோசமிட்டு, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மாலையில், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி திருவீதி உலாவுடன், கும்பாபிஷேக நிகழ்ச்சி நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us