sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.டி., ஊழியரிடம் வழிப்பறி திருநங்கையர் இருவர் கைது

/

ஐ.டி., ஊழியரிடம் வழிப்பறி திருநங்கையர் இருவர் கைது

ஐ.டி., ஊழியரிடம் வழிப்பறி திருநங்கையர் இருவர் கைது

ஐ.டி., ஊழியரிடம் வழிப்பறி திருநங்கையர் இருவர் கைது

1


ADDED : செப் 13, 2025 10:56 AM

Google News

ADDED : செப் 13, 2025 10:56 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு, அதிகாலை சாலையில் நடந்து சென்ற ஐ.டி., ஊழியரிடம், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கையர் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்தவர் ஜெஸ் ஆலன் ரொசாரியா, 24. இவர், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அரும்பாக்கம் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இவர், கடந்த 10ம் தேதி இரவு, காசி தியேட்டரில் இரவு நேர காட்சியில் சினிமா பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை, காசி எஸ்டேட் தெரு வழியாக நடந்து சென்றார்.

அப்போது அவரை வழிமறித்த திருநங்கையர் இருவர், பணம் கேட்டு உள்ளனர். பணம் இல்லை என, ஜெஸ் ஆலன் ரொசாரியா கூறியதால், கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின், பணம் அனுப்பும் மொபைல் போன் செயலி வாயிலாக, 300 ரூபாயை பறித்து தப்பினர்.

புகாரின்படி, எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்து, ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த திருநங்கையரான சாந்தி, 28, சாய்னா, 19, ஆகிய இருவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us