sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சபாக்களில் மயக்கும் மார்கழி இசை கச்சேரி :சுவாரசியமாக அமைந்த முதல் வாரம்

/

 சபாக்களில் மயக்கும் மார்கழி இசை கச்சேரி :சுவாரசியமாக அமைந்த முதல் வாரம்

 சபாக்களில் மயக்கும் மார்கழி இசை கச்சேரி :சுவாரசியமாக அமைந்த முதல் வாரம்

 சபாக்களில் மயக்கும் மார்கழி இசை கச்சேரி :சுவாரசியமாக அமைந்த முதல் வாரம்


ADDED : டிச 21, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்கழி இசை விழாவின் ரசிகானுபவத்தை மேம்படுத்த எண்ணற்ற சபாக்களில் கச்சேரி களை கட்டியுள்ளது.

நா த இன்பத்தில் முனைவர் நந்திதா ரவி, ரூபக தாளத்தில் சாரங்கா ராக வர்ணத்தில், கச்சேரியை துவக்கினார்.

வழக்கமாக, கச்சேரிகளில் பழகிய கல்யாணி - வனஜாக் ஷி, பைரவி - விரிபோணி - ராக வர்ணங்கள் கேட்டாலும், பார்த்தசாரதி சுவாமி சபாவில், பிற்பகல் கச்சேரியில் விவேக் மூழிக்குலம் வழங்கிய வீணை குப்பய்யரின் பெஹாக் ராக வர்ணம், இன்னொரு அரிதான தேர்வு.

வர்ணம் தவிர்த்து, மாலா சந்திரசேகர் குழலிசையில் 'ஸ்ரீமன்நாராயண' என பௌளி ராகத்திலும், பந்துலரமா 'யோசனா கமலலோசனா' என்ற தர்பார் ராகக் கிருதியிலும் கச்சேரியை துவக்கினர்.

திருமெஞ்ஞானம் ராமநாதன் - உடன் பாண்டமங்கலம் யுவராஜ் - நாகஸ்வரத்தில் கௌளையில் தீட்சிதரின் 'ஸ்ரீமஹா கணபதி ரவதுமா' என, ஆதித்யநாராயணன் கௌளிபந்துவில் தியாகராஜரின் 'தரதியகராதா' என்றும் தங்கள் கச்சேரிகளைத் துவங்கி கொண்டனர்.

அ காடமியில், பிற்பகல் கச்சேரி செய்த ஆதித்யநாராயணன், விரைவில் முன்னணியில் ஒரு சுற்று வரப்போகிறார். தோடியும் காம்போதியும் அமர்க்களமாக ஆலாபனை செய்தார். தியாகராயரின் ரூபக தாளத்தில் அமைந்த 'எந்துகு தயராத' கிருதியையும், 'ஆனந்த நடனம் ஆடினார் ததிமி ததிமி என கனகசபையில்' என்ற பல்லவியையும், திஸ்ர திரிபுடை தாளம், நாலு களை சவுக்கத்திலும் இரு மொழிகளின் உச்சரிப்பு நேர்த்தியோடு செம்மையாகப் பாடினார்.

குரல் கார்வைகள், விறுவிறு நிரவல் கட்டமைப்பின் விதம், தனக்கு அடுத்து வயலினை அமர்த்திக்கொள்வது, கைகளை அபிநயித்து ஆட்டுவது என்று போய், குறித்த இடத்தில் சபாஷ் சொல்வது வரை கச்சிதம். இந்த கச்சேரியின் கஞ்சீரா இளைஞன் சுநாத் அரூருக்கு இரட்டை சபாஷ்.

'சே டஸ்ரீபாலகிருஷ்ண' கிருதிக்கு முன் வந்த பிரசன்னாவின் ஆலாபனையைவிட, அகாடமி காலைக் கச்சேரியில் ராமநாதன் நாகஸ்வரத்தில் வாசித்த துவிஜாவந்தி ஆலாபனை அபாரம்.

சத்தான சாறு பிழிந்து பருகக் கொடுத்து சவுக காலத்தில் 'அகிலாண்டேஸ்வரி ரக் ஷமாம்' என்று கிருதியை இரட்டை நாயனங்களும் இணைந்து துவங்குகையில் நொடிப்பொழுது மனதிலெழும் ஆன்மிகச் சிலிர்ப்பு ஒரு கொடை. அதன் தாக்கம் சிற்றுண்டி உணவகத்தில் 'இளநீர் இட்லி'யைச் சுவைக்கும் வரை நீடித்தது.

ம யிலாப்பூர், ராக சுதா அரங்கில் எம்.ஏ.சுந்தரேசன், எம்.ஏ.அனந்தகிருஷ்ணன் இணைந்து வழங்கிய 'பரூர் பாணி' இரட்டை வயலின் கச்சேரி. மோஹனமும், கரஹரப்பிரியாவும் விஸ்தாரமான ஆலாபனைகளாகக் கேட்கக் கிடைத்தது.

வயலினில் சுந்தரேசன் ஆகட்டும், மற்றொரு நாள் வேறொரு அரங்கில் குழலிசையில் சிக்கில் மாலா சந்திரசேகர் ஆகட்டும், முந்தைய தலைமுறையினருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட கச்சேரி நேரத்திற்குள் எடுத்துக்கொண்டு, அனைத்து ராகங்களையும் கோடிகாட்டும் ஆலாபனைகளுக்கும் ஓரிரண்டில் கிருதி வரிகளில் விஸ்தாரமாக நிரவல் செய்வதற்கும் ஸ்வரகற்பனைக்கும் நிறைய அவகாசம் கிடைப்பது எப்படி? அதுதான் அவர்க ளின் துல்லியம்!

கச்சேரிகளை ரசிக்க 'ஒரு நாள் போதுமா' அ காடமியின் மார்கழி விழா துவக்க நாள் இரவு , வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை மிருதங்க வித்வான் அருண் பிரகாஷ் வழங்கினார். மேடையி ல் இரட்டைத் தம்பூராக்களோடு அரைவட்டமாகப் பலவர்ணப் பட்டாடைகளில் பதினாறு இளைய தலைமுறைக் கலைஞர்கள் அமர்ந்திருந்தனர். வயலின், குழல், நாதஸ்வரம், வீணை, சித்ரவீணை, முகர்சிங், மிருதங்கம், கடம் என - தவில் காணோமே? - ஆண், பெண் பாடகர்களோடு இணைத்து பாட்டிசைத்தார். அதேபோல் இடையிசையும் தனித்தனியே அமைத்துப் அபங், பல்லவி, தில்லானா போன்ற பலவித இசை வடிவங்களை தனி ஆவர்த்தனங்களோடு வழங்கினர். திருவிளையாடல் திரைப்படத்தின் 'ஒரு நாள் போதுமா' பாடல் காட்சி, சட்டென நினைவூட்டியது. கேட்டு ரசிக்க ஓர் இரவு போதாது. 'பின்னொரு இரவினிலே' என, துவங்கிய பாரதியார் பாட்டும் 'வாழ்வினில் அனைவருக்கும் பிரதானமானது மனிதநேயம்' என்ற கண்டஜாதி திரிபுடைத் தாளப் பல்லவியும், இந்நிகழ்ச்சியின் உயரொளி. பல்லவியில் 'பிரதானமான' என்பதற்குத் தமிழ்ச்சொல் ஏதாவது பொருத்தியிருக்கலாம். பாடகர் 'அனிவருக்கும்' என்ற உச்சரிப்பையும் தவிர்த்திருக்கலாம். சே ர்த்தலை முனைவர் ரங்கநாத சர்மா, பார்த்தசாரதி சுவாமி சபாவில் மாலைக் கச்சேரியில் அரிய எழுபத்தியொன்றாவது மேளகர்த்தா கோசலம் ராகத்தில், கோடீஸ்வரின் கிருதி காகுகா வழங்கிய ஆலாபனை, நல்ல முயற்சி. இந்தச் சம்பூர்ண ராகத்தினுடைய ஸ்வரங்களை 'ரிமதநி, பதபகஸ' என்று பிரித்து விரிக்கையில், வேறு ஜன்ய ராகங்கள் ஒலிப்பது பரவாயில்லை; ஆனால் கோசலத்தின் உருவம் என்னவென்றே புரியாமல் போவது தோல்வி. இம்முயற்சியுடன் ஒப்பிட்டால் இதே சபாவில் மறுநாள் மாலைக் கச்சேரியில் முனைவர் பந்துல ரமாவின் அரிய 'சௌவீரம்' ராகம், இதை சுவர்நாங்கி என்றும் சொல்வர், ஆலாபனை நேர்த்தியா னது.



இரட்டை வீணையின் வசீகரம் வி.வி.எஸ்., பவுண்டேஷன், சாமா ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் ஒன்றரை மணி நேர 'ஏகாந்த வரிசை' கச்சேரிகள், காலை 6:00 மணிக்கு மயிலாப்பூர் சுந்தரேசன் தெருவில் நடந்து வருகின்றன. ஆட்டோவில் பயணிக்கையில், சென்னைச் சாலைகள் இவ்வளவு அகலமானவையா என வியந்தவாறு ஆஞ்சநேயர் - ராகவேந்திரர் கோவிலை அ டைந்தேன். உள்ளே, அம்புக்குறியிடப்பட்ட தரையில் வலமாக நடந்து சுவர் ஓரம் அமர்ந்தேன். அகல் விளக்குகளின் வெளிச்சத்தில் மைக் ஸ்பீக்கர் மேடைகள் இன்றி, மிருதங்கம், முகர்சிங் பக்கவாத்தியங்களுடன், இரட்டை வீணைக் கச்சேரி, குறித்த நேரத்திற்குத் துவங்கிவிட்டது. நாட்டை ராக 'மஹாகணபதிம்' கிருதிக்கு அடுத்து, ஆபோகி ராகத்தில் ஆலாபனை. தும்மல், இருமல்கள் கார்வைகளை அமிழ்த்திவிடும் அபாய அமைதியினுாடே இரண்டு வீணைகளிலும் ராகம் நன்றாகவே வடிவமைந்து ஒலித்தது. ராம்நாத் - கோபிநாதர் என பெயருடைய அய்யர் சகோதரர்கள், ஆஸ்திரேலிய மெல்போர்ன் வாசிகள். சீசனுக்குத் தவறாமல், சென்னை வந்து வாசித்துச் செல்கின்றனர். அந்த வகையில், மெயின் உருப்படி கல்யாணி ராகத்தில். முகர்சிங்கும் வீணையும் இரட்டைத் தந்தி வாத்தியங்கள் போல ஸ்ருதியும் , லயமும் இணைந்து வழங்கிய கிருதி வடிவம். இவ்வகை 'சேம்பர்' இசை அரங்கி லேயே கேட்கச் சாத்தியம். சுற்றம், அதிகாலை அரையிருட்டில் இருக்கையில் மனத்தினுள் கலைத்தெய்வம் மட்டும் பிரகாசமாய் வியாபிக்க வாய்ப்பு அதிகம். வெளிச்சம் ஏறியதும் அறையின் குறுக்காய் தரையில் பாயும் மின்சார ஒயரும் ராகவேந்திரர் படத்தின் கோணலும் மனத்தின் லவுகீக விமர்சனப்புலத்தை வியாபிக்கத் துவங்க விடைபெற்றேன்.



நாகஸ்வரத்தில் கானம் மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் காலணி அகற்றி, கால்கள் கழுவி, கால்சிராய் ஈரம் கலையாமல் ஜமுக்காளத்தில் சம்மண மிடுகையில், மாம்பலம் துரையும், சைதை வெங்கடேசனும் நாகஸ்வரத்தில் வர்ணம் முடிந்து, 'துடுக்குகல' என்ற தியாகராஜரின் பஞ்ச ரத்ன கௌளை ராகக் கிருதியைத் துவங்கிவிட்டிருந்தனர். இயல்பில் ஓங்கி யொலிக்கும் நாகஸ்வர செட்டிற்குத் திறந்தவெளித் திடலே சரி. கோவில் வளாகம், வேண்டிய ஆன்மிகப் பி ன்புலத்தை அளிக்கிறது. என்னோடு ரசிப்பதற்கு முட்டி மடக்கிச் சம்மணமிட முடியாத நான்கைந்து வெள் ளைக்காரர்களும் இருந்தனர். நாகஸ்வரம் கண்கள் மூடி, கன்னம் புடைக்க, கானமூர்த்தி ஆலாபனையில் ஆழ்ந்திருந்தார். தொடர்ந்து கானமூர்த்தி என்று வேணுகான மூர்த்தியை விவரித்து, தியாகராஜரின் ஆதி தாளக் கிருதி வந்தது. அகாடமியில் ராமநாதன் - யுவராஜ் நாகஸ்வரத்தில் வழங்கிய ஜெயந்தசேனா நாட்டைகுறிஞ்சி, பல்லவிக்கு முன்னர் செய்த ராக ஆலாபனைகளும், இங்கு வழங்கப்பட்ட கானமூர்த்தி கௌரிமனோஹரி, மெயின் உருப்படியாக ராக ஆலாபனைகளும், சீசன் முழுதும் காத்திருந்தாலும் மீண்டும் அமையுமா என்பது சந்தேகமே! வடபழனி வடிவேலும் , வேதாரண்யம் ரமேஷும் செய்த இரட்டைத் தவில் தனி ஆவர்த்தனம், ரூபக தாளத்தில் அசத்தினர். பக்தர்களும் இன்றி கோவில் வளாகமே வெறிச்சோடியிருக்க, அந்தக்கால அரசனைப் போல அமர்ந்து ரசித்தேன்.








      Dinamalar
      Follow us