/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் படிக்கட்டில் பயணித்த நடத்துனர் கீழே விழுந்து பலி
/
பஸ் படிக்கட்டில் பயணித்த நடத்துனர் கீழே விழுந்து பலி
பஸ் படிக்கட்டில் பயணித்த நடத்துனர் கீழே விழுந்து பலி
பஸ் படிக்கட்டில் பயணித்த நடத்துனர் கீழே விழுந்து பலி
ADDED : அக் 03, 2024 12:44 AM
தாம்பரம், திருவண்ணாமலை மாவட்டம், களசப்பாக்கம் தாலுகாவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 52. போளூர் - தாம்பரம் இடையே இயக்கப்படும் தடம் எண்:148 என்ற அரசு பேருந்தில், நடத்துனராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல், போளூரில் இருந்து தாம்பரம் வந்த பேருந்தில், பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணித்ததாக கூறப்படுகிறது. தாம்பரம் ஹிந்து மிஷன் மருத்துவமனை அருகே வந்த போது, திடீரென நிலைதடுமாறிய சீனிவாசன், பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஓட்டுனர் முருகன், உடனே பேருந்தை நிறுத்தி, பொதுமக்கள் உதவியுடன் சீனிவாசனை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், நடத்துனர் சீனிவாசன் இறந்தது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

