sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாடிக்கையாளர் திட்டியதால் 'ஸ்விகி' ஊழியர் தற்கொலை?

/

வாடிக்கையாளர் திட்டியதால் 'ஸ்விகி' ஊழியர் தற்கொலை?

வாடிக்கையாளர் திட்டியதால் 'ஸ்விகி' ஊழியர் தற்கொலை?

வாடிக்கையாளர் திட்டியதால் 'ஸ்விகி' ஊழியர் தற்கொலை?


ADDED : செப் 19, 2024 12:43 AM

Google News

ADDED : செப் 19, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார், கொளத்துாரைச் சேர்ந்தவர் பவித்ரன், 19; கல்லுாரி மாணவர். இவர், 'ஆன்லைன்' உணவு, மளிகை பொருட்கள் வினியோகிக்கும் நிறுவனமான 'ஸ்விகி'யில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

கொரட்டூர், ஏ.வி.எஸ்., பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த நிஷா என்பவர் 'ஆர்டர்' செய்த மளிகை பொருட்களை கொடுப்பதற்காக, கடந்த 11ம் தேதி சென்றுள்ளார்.

'ஸ்விகி' செயலியில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று, வாடிக்கையாளரை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு நிஷா, 'மேப் லோக்கேஷன்' தவறாக காண்பிக்கிறது. அருகே உள்ள தன் வீட்டின் முகவரி கொடுத்துள்ளார்.

ஆனால் பவித்ரன் 'அங்கு வரமுடியாது; நீங்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்லுங்கள்' என, தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நிஷா, 'ஸ்விகி' நிறுவனத்தில் புகார் அளித்துள்ளார். அதனால், நிறுவனம் பவித்ரனை வேலை விட்டு நீக்கியுள்ளது.

இதில் அதிருப்தியடைந்த பவித்ரன், கடந்த 13ம் தேதி நிஷாவின் வீட்டிற்கு வெளியே நின்று கற்களை வீசியுள்ளார்.

அந்த கல், ஜன்னல் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த அவரது 5 வயது மகனின் தலையில் பட்டு லேசாக காயம் ஏற்பட்டுள்ளது. கொரட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பவித்ரன் மீது வழக்கு பதிந்த போலீசார், அவரை அழைத்து எச்சரித்து அனுப்பினர். இதனால் விரக்தியடைந்த பவித்ரன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us