sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 காவல் துறையின் 'சிசிடிவி கேமரா' டெண்டருக்கு தடை விதிக்க மறுப்பு

/

 காவல் துறையின் 'சிசிடிவி கேமரா' டெண்டருக்கு தடை விதிக்க மறுப்பு

 காவல் துறையின் 'சிசிடிவி கேமரா' டெண்டருக்கு தடை விதிக்க மறுப்பு

 காவல் துறையின் 'சிசிடிவி கேமரா' டெண்டருக்கு தடை விதிக்க மறுப்பு


ADDED : டிச 27, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை காவல்துறையின், 'சிசிடி வி' கேமராக்கள் பொருத்தும் டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கோபாலபுரத்தை சேர்ந்த, 'பேட்ரியா செக்யூரஸ் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, 5 கோடி ரூபாய்க்கான டெண்டர் அக்., 29ல் வெளியானது. ஐந்து முறை தொழில்நுட்ப விபரங்கள் மாற்றப்பட்டன.

அதேபோல் மக்கள் கூடும் இடங்களில், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கேமராக்கள் அமைப்பதில் உள்ள குறைபாடு களை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, போலீஸ் கமிஷனர் கண்டுகொள்ளவில்லை.

எனவே, டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தர ப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுரேஷ்குமார், அரசு வழக்கறிஞர் முகமது சாதிக் ஆகியோர் ஆஜராகி, ''டெண்டருக்கான அவகாசம் டிச., 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. டெண்டர் திருத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஏலதாரர்களுக்கு ஒருவார அவகாசம் தரப்பட்டுள்ளது,'' என்ற னர்.

இதையடுத்து, டெண்டர் நடைமுறைகளுக்கு இடைகால தடையேதும் விதிக்காமல், விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us