/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
/
தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 08, 2024 12:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், பி.டி.மூர்த்தி நகர், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு சென்ற வெங்கடேசன், மனைவியிடம் தகராறு செய்துவிட்டு, படுக்கை அறைக்கு சென்றவர், புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

