/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
80 வயது மூதாட்டியை குடும்பத்துடன் இணைத்து வைத்த காவல் கரங்கள்
/
80 வயது மூதாட்டியை குடும்பத்துடன் இணைத்து வைத்த காவல் கரங்கள்
80 வயது மூதாட்டியை குடும்பத்துடன் இணைத்து வைத்த காவல் கரங்கள்
80 வயது மூதாட்டியை குடும்பத்துடன் இணைத்து வைத்த காவல் கரங்கள்
ADDED : செப் 10, 2025 09:39 AM

சென்னை: மடுவாங்கரை பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த, 80 வயது மூதாட்டியை அவரது குடும்பத்தினரிடம் சேர்த்து வைத்த காவல் கரங்கள் உதவி மையத்தினரை, போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
கிண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட மடுவாங்கரை பகுதியில், 80 வயது மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருப்பதாக காவல் கரங்கள் குழுவினருக்கு, ஜூலை, 30ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து மூதாட்டியை மீட்ட குழுவினர், காப்பகத்தில் சேர்த்து அவருக்கு தேவையான உதவியை வழங்கி வந்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி, உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள், 80 என்பதும், நினைவு மறதி காரணமாக கடந்த ஜூன் 8ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர், மடுவாங்கரை பகுதியில் சுற்றி வந்ததும் தெரியவந்தது.
மூதாட்டி காணாமல் போனது தொடர்பாக, அவரது உறவினர்கள், உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததும் தெரியவந்தது.
விசாரணைக்கு பின், மூதாட்டியை, அவரது குடும்பத்தினருடன் காவல் கரங்கள் குழுவினர் நேற்று சேர்த்தனர்.
காவல் கரங்கள் குழுவினரின் செயலை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
காவல் கரங்கள் உதவி மையம் வாயிலாக, இதுவரை 1,415 பேர் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப் பட்டுள்ளனர்.