/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
ADDED : டிச 30, 2024 01:29 AM
செங்கல்பட்டு,: செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜி.எஸ்.டி., சாலையில், சென்னை மார்க்கத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் அருகில், வாகனத்தில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு இறந்து கிடந்த அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடலை மீட்டனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, அந்த உடலை அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர், கடந்த சில நாட்களாக, இந்த பகுதியில் பிச்சை எடுத்து சாலையில் சுற்றி திரிந்ததும், நேற்று சாலையைக் கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்ததும் தெரிந்தது.
செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.

