sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னையில் கணவனும் சொந்த ஊரில் மனைவியும் துாக்கிட்டு தற்கொலை

/

சென்னையில் கணவனும் சொந்த ஊரில் மனைவியும் துாக்கிட்டு தற்கொலை

சென்னையில் கணவனும் சொந்த ஊரில் மனைவியும் துாக்கிட்டு தற்கொலை

சென்னையில் கணவனும் சொந்த ஊரில் மனைவியும் துாக்கிட்டு தற்கொலை


ADDED : பிப் 07, 2024 12:44 AM

Google News

ADDED : பிப் 07, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.கே., நகர், சென்னையில் கணவனும், சொந்த ஊரான வாணியம்பாடியில் மனைவியும் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கே.கே., நகர் 9 வது செக்டார், 48 வது தெருவை சேர்ந்தவர் அருண் குமார், 37. இவர், அசோக் நகரில் உள்ள சி.சி.டி.வி., கேமரா நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன், வாணியம்பாடியை சேரந்த தேன்மொழி, 30 என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சென்னையில் வசித்து வந்தார்.

இந்நியைலில், அருண் குமாரின் தம்பி ராஜாவிற்கு வாணியம்பாடியில் திருமணம் நடந்தது. இதற்காக கடந்த ஜன., மாதம் அருண் குமார் மற்றும் அவரது மனைவி தேன்மொழி ஆகியோர் சென்றனர்.

பின், மனைவியை ஊரில் விட்டு விட்டு, அருண் குமார் மட்டும் சென்னை திரும்பி தனியாக வசித்து வந்தார். அருண் குமாரை சில நாட்களாக காணாததால், அவரது வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் லோகேஷ் என்பவர், முதல் தளத்திற்கு சென்று பார்த்தார்.

அங்கு அருண் குமாரின் மொபைல் போன் இருந்தது. மேலும், வீட்டின் வெளியே அவரது இருசக்கர வாகனமும் இருந்துள்ளது. இதையடுத்து, அருண் குமாரின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் தகவல் தெரிவித்தார்.

எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம் கே.கே., நகர் காவல் நிலையத்தில் லோகேஷ் புகார் அளித்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு கே.கே., நகர் போலீசார் அருண் குமாரின் வீட்டின் கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, அருண் குமார் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை மீட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், அருண் குமாரின் மனைவி, தேன்மொழி அவரது தாய் மணிமேகலை வீட்டில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

கணவன் சென்னையிலும், மனைவி சொந்த ஊரிலும் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதால், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்தனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us