sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 குரோம்பேட்டையில் கழிவுநீர் கால்வாயை வெறும் கைகளால் துார்வாரிய ஊழியர்கள்

/

 குரோம்பேட்டையில் கழிவுநீர் கால்வாயை வெறும் கைகளால் துார்வாரிய ஊழியர்கள்

 குரோம்பேட்டையில் கழிவுநீர் கால்வாயை வெறும் கைகளால் துார்வாரிய ஊழியர்கள்

 குரோம்பேட்டையில் கழிவுநீர் கால்வாயை வெறும் கைகளால் துார்வாரிய ஊழியர்கள்

1


UPDATED : நவ 30, 2025 06:35 AM

ADDED : நவ 30, 2025 01:44 AM

Google News

UPDATED : நவ 30, 2025 06:35 AM ADDED : நவ 30, 2025 01:44 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை: குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் எதிரே, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயை, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, வெறும் கையால் ஊழியர்கள் துார்வாரியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையில் வெற்றி தியேட்டர் அருகே துவங்கும் கால்வாய், ஜி.எஸ்.டி., சாலை - ரயில்வே பாதையை கடந்து, சாந்தி நகர், நாயுடு ஷாப் சாலை வழியாக பெரிய ஏரிக்கு செல்கிறது.

ஒவ்வொரு மழையின்போது, நியூ காலனி, சாஸ்திரி காலனி, சேம்பர்ஸ் காலனி, ஜி.எஸ்.டி., சாலை ஆகிய இடங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், இக்கால்வாய் வழியாக ஏரிக்கு செல்கிறது.

இதில், ரயில்வே பாதை வழியாக செல்லும் கால்வாய், பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ளது.

அதே நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும், மழைக்கு முன் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான கால்வாயை துார்வாரி, தயார் நிலையில் வைத்திருப்பது வழக்கம்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்லும் கால்வாயை துார்வாரும் பணி, நேற்று நடந்தது. இதில், இரு பெண்கள், மூன்று ஆண்கள் என, ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அவர்கள் யாரும், பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, பூட்ஸ், முககவசம் என, எதையுமே அணியவில்லை. மாறாக, வெறும் கைகளாலயே மண், கற்களை அள்ளி, கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஹோட்டல், குடியிருப்புகளின் சாக்கடை கழிவு, மனித கழிவு கலக்கும் கால்வாயில், பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல், வெறும் கைகளால், ஊழியர்கள் கழிவை அள்ளியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பணியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மேற்பார்வையாளர், இதை பற்றி சிறிது கூட கவலையின்றி அமர்ந்திருந்தார்.

அவரிடம் கேட்டபோது, 'கையுறை அணிந்து சரியாக அள்ள முடியவில்லை. வெறும் கைகளால் அள்ளினால் ஒன்றும் ஆகாது. பல ஆண்டுகளாக இப்படித் தான் அள்ளுகிறோம்' என, அலட்சியமாக பதிலளித்தார்.

ஓரிடத்தில் துார்வாரும் பணியில் தொழிலாளர்களை அமர்த்தும்போது, அவர்கள் முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணிபுரிகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டியது, நெடுஞ்சாலைத் துறையின் வேலை. ஆனால், அங்கு நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த யாருமே இல்லை.

சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், இதுகுறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற சம்பவங்கள் குறையும்.






      Dinamalar
      Follow us