sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு

/

குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு

குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு

குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் பாராட்டு

2


ADDED : செப் 09, 2025 11:22 PM

Google News

ADDED : செப் 09, 2025 11:22 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :சிறுமி பாலியல் வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த இன்ஸ்பெக்டர் தர்மாவை அழைத்து, போலீஸ் கமிஷனர் அருண், நேற்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.

அடையாறு பகுதியில், 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, 20 வயது வாலிபரை, போக்சோ சட்டத்தில், அடையாறு மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இன்ஸ்பெக்டர் தர்மா தலைமையிலான குழுவினர் விசாரித்து, இறுதி அறிக்கை தயார் செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, வாலிபருக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கடந்த 25ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த, பெண் இன்ஸ்பெக்டர் தர்மாவை நேற்று, கமிஷனர் அருண் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.

7 பேருக்கு வெகுமதி

புனித தோமையர் மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கஞ்சா வைத்திருந்த, சிறுவன் உட்பட ஏழு பேரை கைது செய்த உதவி ஆய்வாளர் கரிகாலன், காவலர்கள் பாலாஜி, முனியசாமி ஆகியோருக்கு, கமிஷனர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

அதேபோல், திருவொற்றியூரில் குறைதீர் முகாமில் வலிப்பு ஏற்பட்ட, 2 வயது குழந்தையை மீட்டு, விரைந்து மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிதுரைக்கும், கமிஷனர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

***






      Dinamalar
      Follow us