/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் சில்மிஷம் மர்ம நபருக்கு வலை
/
பெண்ணிடம் சில்மிஷம் மர்ம நபருக்கு வலை
ADDED : பிப் 08, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைந்தகரை,
சாலையில் நின்ற இளம்பெண்ணை சீண்டியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த, 20 வயது இளம்பெண், சில நாட்களுக்கு முன், அதே பகுதியில் சாலையில் நின்று மொபைல் போனில் பேசியுள்ளார்.
அப்போது, அவ்வழியாக, 'பைக்'கில் வந்த மர்ம நபர், இளம்பெண்ணை சில்மிஷம் செய்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து அமைந்தகரை போலீசில், பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

