/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கல்பட்டில் கைதான பயங்கரவாதி அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியது அம்பலம்
/
செங்கல்பட்டில் கைதான பயங்கரவாதி அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியது அம்பலம்
செங்கல்பட்டில் கைதான பயங்கரவாதி அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியது அம்பலம்
செங்கல்பட்டில் கைதான பயங்கரவாதி அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியது அம்பலம்
ADDED : செப் 10, 2025 07:04 AM

சென்னை : செங்கல்பட்டில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஹ்லத்துார், சமூக வலைதளங்கள் வாயிலாக, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, இந்திய அரசுக்கு எதிராக ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், பஹல்காம் பகுதியில் ஊடுருவிய பாக்., பயங்கரவாதிகள், ஏப்., 22ல், அப்பாவி சுற்றுலாப் பயணியர், 26 பேரை சுட்டுக் கொன்றனர்.
இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பல மாநிலங்களில், அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணி நடப்பதை கண்டறிந்தனர்.
விசாரணையின் தொடர்ச்சியாக, தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்கியிருந்த, பீஹார் மாநிலத்தை சேர்ந்த, பயங்கரவாதியான அஹ்லத்துார் என்ற முகமது அக்லிக் முஜாஹித், 22 என்பவரை, ஜூன் மாதம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, நாடு முழுதும், 21 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இது குறித்து என்.ஐ.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஹ்லத்துாரிடம் நடத்திய விசாரணையில், அவர், சமூக வலைதளங்கள் வாயிலாக, பயங்கரவாத அமைப்புகளுடன், தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக, பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும், ஐ.எஸ்., உட்பட, பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருப்பதும், இந்திய அரசுக்கு எதிராக, ஜிஹாத் என்ற பெயரில், இளைஞர்களை மூளை சலவை செய்து வந்ததும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஜம்மு - காஷ்மீர், பீஹார், உ.பி., கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில், 21 இடங்களில் சோதனை நடத்தினர்.
சோதனை நடந்த இடங்களில் வசித்தவர்கள் அனைவரும், அஹ்லத்துாருடன் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், மொபைல் போன் வாயிலாகவும், தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களிடம் இருந்து, மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதி அஹ்லத்துாரிடம் தொடர்பில் இருந்த, அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.