/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊராட்சி துணை தலைவர் உட்பட 6 குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு
/
ஊராட்சி துணை தலைவர் உட்பட 6 குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு
ஊராட்சி துணை தலைவர் உட்பட 6 குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு
ஊராட்சி துணை தலைவர் உட்பட 6 குடும்பத்தினர் ஒதுக்கிவைப்பு
ADDED : செப் 20, 2024 11:56 PM

செங்கல்பட்டு, ஊராட்சி பெண் துணைத் தலைவர் உட்பட ஆறு குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த, கிராம பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினியிடம், நேற்று மனு அளிக்கப்பட்டது.
மாமல்லபுரம் அடுத்த, கொக்கிலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜாத்தி, 40, எடையூர் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார். அவர் மற்றும் ஆறு குடும்பத்தினர், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினியிடம் மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கிராம மீனவர் பஞ்சாயத்து சபையினர், ராஜாத்தி மற்றும் ஆறு குடும்பத்தினரை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
இதுறித்து, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியரிடம், ஜூன் 13ல் மனு அளித்தோம். ஜூலை 11ல், சப்- - கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஜூன், 15ல் வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும், அதன்பின், ஜூலை 16ல் நடந்த பேச்சுவார்த்தையிலும், அதன்பின், நிபந்தனைகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மீனவர் பஞ்சாயத்து சபையினர் எழுதி கொடுத்தனர். ஆனால், மீண்டும் ராஜாத்தி மற்றும் ஆறு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து, கடலுக்கு சென்று மீன்பிடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை மீனவர் பஞ்சாயத்தினர் விதித்துள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி தெரிவித்தார்.