sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருடு போன 51 சவரன் நகை மீட்பு 

/

திருடு போன 51 சவரன் நகை மீட்பு 

திருடு போன 51 சவரன் நகை மீட்பு 

திருடு போன 51 சவரன் நகை மீட்பு 


ADDED : ஜூலை 16, 2024 12:37 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி, மும்பை, தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிர்மா, 59. இவர் கடந்த 12ம் தேதி மும்பையில் இருந்து குடும்பத்துடன் சென்னை வந்தார்; பட்டாளம் பகுதியில் உள்ள சாந்தி பவனில் அறை எடுத்து தங்கினார்.

அறையில் கைப்பை ஒன்றில் அனைவரது நகைகளையும் கழற்றி வைத்துவிட்டு, மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். மீண்டும் அறைக்கு வந்து நகைகளை பார்த்த போது, நகை மற்றும் 1,500 ரூபாயை காணவில்லை.

இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் நிர்மா புகார் அளித்தார். 'சிசிடிவி' காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தனர். சாந்தி பவனில் காவலராக பணியாற்றும் மேஷராக் என்பவரின் மகன், வியாசர்பாடியைச் சேர்ந்த இளவரசன், 37, என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது.

விசாரணையில், 12ம் தேதி மது போதையில் சாந்தி பவன் வந்த இளவரசன், நிர்மா தங்கியிருந்த அறையை திறந்து 51 சவரன் நகைகளை திருடியது தெரிய வந்தது.

நகைகளை மீட்ட போலீசார், இளவரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us