sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை விழுவதாக புகார்

/

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை விழுவதாக புகார்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை விழுவதாக புகார்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை விழுவதாக புகார்


ADDED : ஏப் 20, 2024 12:15 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி,வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த விஜய் என்பவர், நேற்று காலை ஓட்டு போட சென்றார்.

அப்போது, அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதாகவும், தாமரைக்கு ஓட்டு விழுந்ததாகவும் கூறி, அங்கு இருந்த கட்சியினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அ.தி.மு.க., பிரமுகர்கள், ஓட்டுசாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

தேர்தல் அதிகாரி, ஓட்டுப்பதிவு இயந்திர பொறியாளர் இயந்திரத்தை சரிபார்த்தனர். அப்போது, எந்த பிழையும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. எனினும், 25க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவரை எச்சரித்து விடுவித்தனர்.

'வதந்தி கிளப்பிய அ.தி.மு.க.,'

சம்பவ இடத்தில் பா.ஜ., வேட்பாளர் பால்கனராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் கூறியதாவது:வடசென்னையில் லோக்சபா தேர்தல் அமைதியான முறையில் நடந்துள்ளது. எம்.கே.பி.நகர், 37 வது வட்டம், 150வது ஓட்டுசாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும், தாமரைக்கு ஓட்டு விழுவதாக புகார் எழுந்தது. ஆனால், ஓட்டு இயந்திரத்தில் எந்த கோளாறும் ஏற்படவில்லை. அ.தி.மு.க., பிரமுகர் விஜய் என்பவர் வேண்டுமென்று புரளி கிளப்பி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us