ADDED : ஏப் 30, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர், சென்னை, எம்.கே.பி.நகர், மேற்கு அவென்யூ சாலையில் ரேஷன் அரிசியை கடத்துவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன்படி, எம்.கே.பி.நகர் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் இருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பின், சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, எம்.கே.பி.நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான துஸ்தும் அலி கான், 33, என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான தவ்லத் நிஷா, 44, சையத் சாதிக், 40, ஆகியோரை தேடி வருகின்றனர்.

