/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரும்புலியூரில் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்
/
இரும்புலியூரில் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்
இரும்புலியூரில் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்
இரும்புலியூரில் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்
ADDED : டிச 16, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்: தாம்பரம் அருகே இரும்புலியூரில், பயணியர் வசதிக்காக ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம் அடுத்த இரும்புலியூரில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து, ஏராளமானோர் பேருந்துகள் மூலமாக பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர்.
இந்த நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் உட்கார கூட இடம் இல்லாமல் பெண்கள், முதியவர்கள் நீண்ட நேரம் நின்றபடியே பேருந்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, பழைய நிழற்குடை அருகே பயணிருக்கு ஏற்ற வகையில், புதிதாக நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

