/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உறவினர் வீட்டிற்கு வந்தவர் கழுத்தறுத்து கொலை
/
உறவினர் வீட்டிற்கு வந்தவர் கழுத்தறுத்து கொலை
ADDED : மார் 15, 2024 09:23 PM
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூரில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது.
இது குறித்து, அந்த வழியாக சென்ற கிராம மக்கள், செய்யூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்கு பதிந்து, உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின், போலீசார் விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்ட நபர், திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் சரஸ்வதி நகர், 4வது தெருவைச் சார்ந்த சோழராஜன், 40, என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரித்ததில், அவர் சில நாட்களுக்கு முன், வடக்கு செய்யூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததும், நேற்று முன்தினம் இரவு, உறவினர் வீட்டில் இருந்த சோழராஜனை, அவரது தம்பி பிரபு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, பிரபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

