/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒப்பந்த ஊழியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஒப்பந்த ஊழியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2026 05:41 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் மீது அவதுாறு பரப்பும் ஒப்பந்த ஊழியர்களை கண்டித்து, தமிழக அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்கங்களின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவ நிலைய மருத்துவர் முகுந்தன் மீது, சில ஒப்பந்த ஊழியர்கள் ஆதாரமற்ற பொய் புகார்களை அளித்து மிரட்டி வருவதாகவும் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவதுாறு பரப்பும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதில், நுாறுக்கும் மேற்பட்ட டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பங்கேற்றனர்.

