/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலில் மாசி அமாவாசை வழிபாடு
/
கந்தசுவாமி கோவிலில் மாசி அமாவாசை வழிபாடு
ADDED : மார் 11, 2024 06:00 AM

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இதுதவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.
வழக்கமாக வார நாட்களில், செவ்வாய்க்கிழமை உட்பட விடுமுறை நாட்களில் கந்தபெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேற்று, விடுமுறையுடன் மாசி அமாவாசை வந்ததால், கோவிலுக்கு காலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டுச் சென்றனர். எடைக்கு எடை துலாபாரம் எடுத்தல், மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடனையும் பக்தர்கள் நிறைவேற்றினர்.

