sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூடுவாஞ்சேரி அறிவுசார் மையம் 3 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்

/

கூடுவாஞ்சேரி அறிவுசார் மையம் 3 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்

கூடுவாஞ்சேரி அறிவுசார் மையம் 3 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்

கூடுவாஞ்சேரி அறிவுசார் மையம் 3 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்


ADDED : ஏப் 10, 2025 02:01 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி, 8.5 சதுர கி.மீ., பரப்பில் உள்ளது. இங்குள்ள 30 வார்டுகளில், லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

தவிர, சுற்றுப் பகுதியில் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறவும் உதவும் வகையில் புத்தகங்கள், அறிவியல், கணிதம், பொருளாதாரம், நிதி மேலாண்மை 'ஸ்மார்ட் கிளாஸ்', வாசிப்பு அரங்க வசதிகளை உள்ளடக்கிய அறிவுசார் மையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

அதன்படி, நெல்லிக்குப்பம் சாலை, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே, 1.82 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு கட்டுமான பணிகள் துவங்கி, தற்போது முடியும் தறுவாயில் உள்ளன.

இந்நிலையில், அறிவுசார் மையத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு, மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us