/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
� காஞ்சி - செங்கல்பட்டு பைபாஸ் சாலை பணியில்... சுணக்கம் ! � போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
� காஞ்சி - செங்கல்பட்டு பைபாஸ் சாலை பணியில்... சுணக்கம் ! � போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
� காஞ்சி - செங்கல்பட்டு பைபாஸ் சாலை பணியில்... சுணக்கம் ! � போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
� காஞ்சி - செங்கல்பட்டு பைபாஸ் சாலை பணியில்... சுணக்கம் ! � போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 11, 2024 05:00 AM

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சி ராஜவீதி வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து, சதுக்கம் வழியாக வாலாஜாபாத் - வண்டலுார் சாலை வழியாக, தாம்பரம் செல்லும் வாகனங்கள் செல்கின்றன.
ஒரே நேரத்தில், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிக்கு செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் மற்றும் டிப்பர் லாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துஉள்ளதால், வாலாஜாபாதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
புலம்பல்
இதைத் தவிர்க்க, புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என, பல தரப்பு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - சதுரங்கப்பட்டினம் சாலை, 448 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில், 141.59 கோடி ரூபாய் செலவில், வாலாஜாபாத் பைபாஸ் என அழைக்கப்படும் புறவழிச் சாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை விரிவுபடுத்தும் பணி, 2022 ஜூலை மாதம் துவக்கப்பட்டு உள்ளது.
இந்த பைபாஸ் சாலை பணிகளை, 2024 மார்ச்- 31ல் முடிக்க வேண்டும் என, திட்டமிடப்பட்டது.
ஆனால், தற்போது வரை, 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை. மேலும், மின்சார ரயில் வழித்தடத்தின் குறுக்கே, மேம்பாலம் கட்டும் பணி இழுபறியாக உள்ளது.
இதனால், பைபாஸ் சாலை அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட அதிகாரி கூறியதாவது:
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நான்குவழிச் சாலையில், 6.864 கி.மீ., துாரத்திற்கு வாலாஜாபாத் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள், புளியம்பாக்கத்தில் துவங்கும் மேம்பாலத்தில் ஏறி, ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை வழியாக வெங்குடி கிராமத்தில் இறங்கிச் செல்லும்.
தாமதம்
அதேபோல, காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் வாகனங்கள், வெங்குடி கிராமத்தில் துவங்கும் மேம்பாலத்தில் ஏறி, கிதிரிப்பேட்டை, ஊத்துக்காடு, புளியம்பாக்கம் மேம்பாலத்தின் வழியாக இறங்கிச் செல்லும்.
இதில், கிதிரிப்பேட்டை அருகே, இரு மேம்பாலங்கள் இணையும் இடத்தில், ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, ரயில்வே நிர்வாகம் அனுமதி தாமதமாக அளித்துள்ளது.
ரயில் இருப்புப் பாதை மீது, மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளன. ஆறு மாதங்களுக்குள் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைந்து முடிக்கணும்!
வாலாஜாபாத் ராஜவீதி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இவ்வழியே செல்லும் டிப்பர் லாரிகள் அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என, அரசிற்கு கோரிக்கை விடுத்து, பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் வேகமெடுத்தன. ஆனால், தற்போது சாலை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், ராஜவீதியில் நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, பைபாஸ் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
- பி.ஜெயக்குமார்,
வாலாஜாபாத்.

