/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கரிக்கிலியில் சுகாதார கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
/
கரிக்கிலியில் சுகாதார கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
கரிக்கிலியில் சுகாதார கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
கரிக்கிலியில் சுகாதார கழிப்பறை பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
ADDED : நவ 20, 2024 01:19 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, கரிக்கிலி ஊராட்சி உள்ளது. கரிக்கிலி ஊராட்சியில், நேற்று உலக கழிப்பறை தினத்தை ஒட்டி, ஊராட்சி தலைவர் புஷ்பா தலைமையில், விழிப்புணர்வு இயக்கம் நடந்தது.
இதில், நமது கழிப்பறை; நமது கவுரவம் எனும் கருப்பொருளின் அடிப்படையில், கிராம பொது மக்களுக்கும், மகளிர் குழு உறுப்பினர்களுக்கும், கழிப்பறையை பயன்படுத்துதல் மற்றும் துாய்மையை பேணி காப்பது குறித்தும் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்படுத்தப்பட்டது.
இதில், துாய்மை பாரத இயக்கம், 2022 -- 23ல், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, சமூக சுகாதார வளாகத்தை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

