sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 நல்ல தண்ணீர் குளம் ரூ.5 கோடியில் சீரமைப்பு

/

 நல்ல தண்ணீர் குளம் ரூ.5 கோடியில் சீரமைப்பு

 நல்ல தண்ணீர் குளம் ரூ.5 கோடியில் சீரமைப்பு

 நல்ல தண்ணீர் குளம் ரூ.5 கோடியில் சீரமைப்பு


ADDED : டிச 31, 2025 06:02 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்: பெருங்களத்துாரில், நல்ல தண்ணீர் குளம் மற்றும் அப்துல் கலாம் பூங்கா ஆகியவற்றை, 5 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையை ஒட்டி, நல்ல தண்ணீர் குளம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த குளத்து நீர், தற்போது கால்நடைகள் குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

போதிய பராமரிப்பு இல்லாததால், குப்பை கொட்டப்பட்டும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. பழமையான இக்குளத்தை துார்வாரி ஆழப்படுத்தி, பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, சி.எம்.டி.ஏ., சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, நல்ல தண்ணீர் குளம் மற்றும் அருகே உள்ள அப்துல் கலாம் பூங்கா ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us