sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 வண்டலுார் - வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்

/

 வண்டலுார் - வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்

 வண்டலுார் - வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்

 வண்டலுார் - வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்


ADDED : டிச 16, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்டலுார்: வண்டலுார் ரயில் நிலையத்திலிருந்து வாலாஜாபாத் செல்ல, ஜி.எஸ்.டி., சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் வழி தவறி, பெருங்களத்துார் வந்து திரும்பிச் சென்று சிரமப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ரயில் நிலையம் அருகில், வாலாஜாபாத் சாலை துவங்குகிறது.

இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லலாம்.

வண்டலுார் வழியாக ரயில்கள் அடிக்கடி செல்வதால், தண்டவாளத்தைக் கடந்து வாலாஜாபாத் சாலைக்குச் செல்ல, வாகனங்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அடிக்கடி நடந்தன.

இதற்கு தீர்வாக, ஜி.எஸ்.டி., சாலையுடன், வாலாஜாபாத் சாலையை இணைக்கும்படி, 27 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

கடந்த 2012ல் பணிகள் முடிந்து, இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தது.

பின், தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் வாகன ஓட்டிகள் அறியும்படி, இந்த மேம்பாலத்தின் முகப்பு பகுதியில், வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.

ஆனால், செங்கல்பட்டு, கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் அறியும்படி, வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை.

இதனால், புதிதாக இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், வாலாஜாபாத் சாலைக்கு செல்வதற்கு பதிலாக, பெருங்களத்துார் வரை வந்து விடுகின்றனர்.

பின், குழப்பத்தை உணர்ந்து, 'யு - டர்ன்' எடுத்து, மீண்டும் வண்டலுார் நோக்கி வந்து, மேம்பாலத்தில் பயணித்து, வாலாஜாபாத் செல்லும் நிலை தொடர்கிறது. இதனால் நேரம் மற்றும் எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. எனவே, இந்த குழப்பத்தை தீர்க்க, வாகன ஓட்டிகளுக்குத் தெரியும் வகையில் வழிகாட்டி பலகை வைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

வாகன ஓட்டிகள் மன உளைச்சல்

வாகன ஓட்டிகள் கூறியதாவது: செங்கல்பட்டிலிருந்து ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் போது, கிளாம்பாக்கம் மற்றும் வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே, மூன்று மேம்பாலங்கள், வாகன ஓட்டிகளை குழப்புகின்றன. அதையடுத்து, வண்டலுார் ரயில் நிலையம் அருகே உள்ள பாலம் எங்கு செல்கிறது என்பதைக் கண்டறிய, வழிகாட்டி பலகை இல்லை. இதனால் வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டிய வாகன ஒட்டிகள், நேராக பெருங்களத்துார் வந்து விடுகின்றனர். பின், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி, இடது பக்கம் திரும்பி, பெருங்களத்துார் ஊர் பகுதிக்குள் செல்கின்றனர். அதன் பின் சுதாரித்து திரும்பி, மீண்டும் வண்டலுார் வருவதற்குள், நேரம் விரயமாகி, மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே, வண்டலுார் ரயில் நிலையம் அருகே, மேம்பாலத்தின் நுழைவு பகுதியில், வாகன ஓட்டிகளின் கண்களுக்கு தெளிவாக புலப்படும்படி, வாலாஜாபாத் செல்லும் வழிகாட்டி பலகை அமைக்க, தமிழக நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us