sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மாடுகள் குறுக்கே வந்ததால் மரத்தில் மோதிய பஸ்

/

 மாடுகள் குறுக்கே வந்ததால் மரத்தில் மோதிய பஸ்

 மாடுகள் குறுக்கே வந்ததால் மரத்தில் மோதிய பஸ்

 மாடுகள் குறுக்கே வந்ததால் மரத்தில் மோதிய பஸ்


ADDED : டிச 21, 2025 05:34 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் குறுக்கே வந்ததால், அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

சேலத்தில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு நேற்று மதியம் 2: 00 மணியளவில் 20 க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக் கொண்டு, அரசு பேருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

மாலை 5:30 மணியளவில், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுப்பாக்கம் வந்தபோது, திடீரென சாலையின் மையப்பகுதியில் இருந்து மாடுகள் கூட்டமாக கடந்ததால், மாடுகள் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வலது புறமாக திருப்பி உள்ளார்.

இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையின் மையப்பகுதியில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பயணியர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

நடத்துனருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அச்சிறுபாக்கம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us