sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நடப்பு ஆண்டில் 32 பேர் உறுப்பு தானம்

/

நடப்பு ஆண்டில் 32 பேர் உறுப்பு தானம்

நடப்பு ஆண்டில் 32 பேர் உறுப்பு தானம்

நடப்பு ஆண்டில் 32 பேர் உறுப்பு தானம்


ADDED : பிப் 02, 2024 11:34 PM

Google News

ADDED : பிப் 02, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம்:வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தனசேகர், 57, ஜன., 30ம் தேதி வீட்டில் தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மூளைச்சாவு அடைந்தார்.

அவரது குடும்பத்தினர், தனசேகர் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர். இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தனசேகர் உடலுக்கு நேற்று, அரசு மரியாதை செலுத்தினார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை:

கடந்தாண்டு, 178 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர். அவர்களது உறுப்புகள் 1,000 பேருக்கு வழங்கப்பட்டன. நடப்பு 2024ம் ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை 32 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். உடல் உறுப்பு வேண்டி காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சிறுநீரகம் 6,266 பேர், கல்லீரல் 400, இதயம் 72, நுரையீரல் 62, இதயம் மற்றும் நுரையீரல் 25, கைகள் 27, சிறுகுடல் இருவர், கணையம், சிறுகுடல், வயிறு வேண்டி இருவர் என மொத்தம், 6,939 பேர், உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்தோருக்கு அரசு மரியாதை செய்யப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த பின், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us