/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயணியர் நிழற்குடை சீரமைப்பது எப்போது?
/
பயணியர் நிழற்குடை சீரமைப்பது எப்போது?
ADDED : மே 19, 2024 01:27 AM

அச்சிறுபாக்கம்,:சிறுதாமூர் கூட்டு சாலையில், பயணியர் நிழற்குடை சீரமைக்கப்படாததால் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஒரத்தி- - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, சிறுதாமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த கூட்டுச்சாலை பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
இங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்பெற்று வந்தனர். தற்போது, உரிய பராமரிப்பின்றி, விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதையடுத்து, நிழற்குடையை சீரமைக்க கோரி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பழுதடைந்துள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக கட்டித்தர துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

