/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார் - பதிவாளர் அலுவலகம் முன் வாகன நிறுத்தத்தால் கடும் அவதி
/
சார் - பதிவாளர் அலுவலகம் முன் வாகன நிறுத்தத்தால் கடும் அவதி
சார் - பதிவாளர் அலுவலகம் முன் வாகன நிறுத்தத்தால் கடும் அவதி
சார் - பதிவாளர் அலுவலகம் முன் வாகன நிறுத்தத்தால் கடும் அவதி
ADDED : ஏப் 12, 2024 11:05 PM

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ளடிபன்ஸ் காலனி செல்லும் சாலையில், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்திற்கு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள், தங்களின் வீடு, இடம் தொடர்பாக பதிவு செய்வதற்கு வருகின்றனர்.
அவ்வாறு பத்திரப்பதிவு செய்வதற்காக வருகை தருவோர், அவர்களது வாகனங்களை சார் - பதிவாளர் அலுவலகம் எதிரே மற்றும் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால், இந்த சாலை வழியே செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், இச்சாலை வழியாக பள்ளி மாணவ - -மாணவியர், பணிக்கு செல்வோர் என, தினமும் 1,000த்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இச்சாலை வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி வாகனங்களுக்கு, சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

