sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: விவசாயிகள் அச்சம்

/

வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: விவசாயிகள் அச்சம்

வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: விவசாயிகள் அச்சம்

வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: விவசாயிகள் அச்சம்


ADDED : ஏப் 03, 2024 12:55 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர்நகராட்சி, 10வது வார்டு கலிவந்தப்பட்டு கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழில்.

கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், நெல் பயிரும், புடலங்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் செல்லும்மின் கம்பிகள், பல இடங்களில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், வயலுக்கு செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் சென்றுவருகின்றனர்.

இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

பல ஆண்டுகளாக, மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. டிராக்டர் வாயிலாக உழவுப்பணிகள் மேற்கொள்ளும் போது, மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால், பணிகளில் தடை ஏற்படுகிறது.

அதேபோல், அறுவடை காலங்களில், இயந்திரங்கள் வாயிலாக அறுவடை பணிகள் மேற்கொள்ளும் போதும், தனியாக ஆட்கள் வைத்து, மரக் கொம்புகள் பயன்படுத்தி, மின் கம்பிகளை உயர்த்தி வழி ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.

சமீபத்தில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து, பசுமாடு உயிரிழந்தது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், இந்த மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us