/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: விவசாயிகள் அச்சம்
/
வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: விவசாயிகள் அச்சம்
வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: விவசாயிகள் அச்சம்
வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: விவசாயிகள் அச்சம்
ADDED : ஏப் 03, 2024 12:55 AM

மறைமலை நகர்:மறைமலை நகர்நகராட்சி, 10வது வார்டு கலிவந்தப்பட்டு கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழில்.
கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், நெல் பயிரும், புடலங்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் செல்லும்மின் கம்பிகள், பல இடங்களில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், வயலுக்கு செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் சென்றுவருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக, மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. டிராக்டர் வாயிலாக உழவுப்பணிகள் மேற்கொள்ளும் போது, மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால், பணிகளில் தடை ஏற்படுகிறது.
அதேபோல், அறுவடை காலங்களில், இயந்திரங்கள் வாயிலாக அறுவடை பணிகள் மேற்கொள்ளும் போதும், தனியாக ஆட்கள் வைத்து, மரக் கொம்புகள் பயன்படுத்தி, மின் கம்பிகளை உயர்த்தி வழி ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.
சமீபத்தில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து, பசுமாடு உயிரிழந்தது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், இந்த மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

