/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெயர்ந்துள்ள சாலையால் கொண்டமங்கலத்தில் பீதி
/
பெயர்ந்துள்ள சாலையால் கொண்டமங்கலத்தில் பீதி
ADDED : ஏப் 18, 2024 10:51 PM

மறைமலை நகர்:கொண்டமங்கலம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில், கோவிந்தாபுரம் -- கொண்டமங்கலம் செல்லும், 5 கி.மீ., துார சாலை உள்ளது.
மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் நுாற்றுக்கும் மேற்பட்டோர், இந்த சாலையில் சென்று வருகின்றனர்.
மேலும், இந்த சாலையை அனுமந்தபுரம், தர்காஸ், பெருந்தண்டலம், சிறுங்குன்றம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பேருந்து வசதி இல்லாததால், அனைவரும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.
சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில், கற்கள் பெயர்ந்தும், மண் துாசு படர்ந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கிராம மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, பல முறை புகார் அளித்தும், புதிய சாலை அமைக்காமல், பள்ளங்களில் மண் கொட்டி சீரமைக்கப்படுவதால், சாலை தொடர்ந்து பெயர்ந்து வருவதாக, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த சாலையில் விளக்குகள் வெளிச்சம் இல்லாததால், இரவு பணி முடித்து செல்வோர் அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது.
எனவே, பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொண்டமங்கலம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

